இரண்டாம் நிலை கட்டுரை

உலகத் தமிழர்கள்

தமிழர்கள் பழங்காலம் தொற்றே, கடல் வழி, கால் வழி என்று உலகம் முழுவதும் பயணம் செய்துதிருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறியோர் பிற இனத்தவருடன் கலந்துவிட்டனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றன் பாடல் அதற்குச் சாட்சியாக விளங்குகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே என்பதாகும்.

சங்ககாலத்தில், தெற்கிலிருந்து வடக்கு கிழக்கு நாடுகளுக்கு மெய்யியல் சித்தாந்தம் பரப்பத் தமிழர்கள் பயணித்துள்ளார்கள். கடலில் கப்பல் வழி வணிகம் செய்யத் தமிழர்கள் உலகெங்கும் பயணித்துள்ளார்கள்.

வெள்ளைக்காரர்களில் ஆட்சியில் செயற்கை பஞ்சத்தின் காரணமாக ஆப்பிரிக்கா, ரியூனியன் போன்ற நாடுகளுக்கு வேலைகளுக்காக இடம் பெயர வைக்கப்பட்டார்கள்.

பர்மா மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வணிகம் மற்றும் வேலைக்காக 200 வருடங்களுக்கு முன்பாகவே இடம்பெயர்ந்துள்ளார்கள்.

கடந்த 50 ஆண்டு ஈழப் போராட்டத்தின் காரணமாகப் பெரும்பாலான தமிழர்கள் ஆஸ்திரேலியா அமெரிக்கா ஐரோப்பிய போன்ற இடங்களுக்கு இடம் பெயர்ந்து உள்ளார்கள்.

இறுதியாக உலகமயமாக்களின் காரணத்தினால், நன்கு கல்வி கற்ற, அறிவில் சிறந்த தலைமுறைகள் பலர், உலகில் உள்ள பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகப் புலம் பெயர்ந்து உள்ளார்கள்.

தமிழர் மக்கள் தொகை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு, ரீயூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு, பிஜி, கயானா, மியான்மர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரான்சிய மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா, அவுத்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.