எழுத்து
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். அதாவது நாம் வாயால் பேசும் ஒலிகளுக்கு வரி உருவம் கொடுப்பது எழுத்தாகும்.
தமிழ் மொழியின் ஒலி 30 எழுத்துக்களில் அடக்குகின்றன அவை முதல் எழுத்துகள் எனப்படுகின்றன.
முதல் எழுத்து என்பது 12 உயிர் எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் ஆகும்.
அ முதல் ஒள வரை உயிர் எழுத்துகள் ஆகும்.
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
க் முதல் ன் வரை 18 மெய் எழுத்துகள் ஆகும்.
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன் |
மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்து உருவாகுவது உயிர்மெய் எழுத்தாகும்.
எடுத்துக்காட்டு
க் + அ = க
த் + ஆ = தா
ந் + ஈ = நீ
ப் + ஊ = பூ
இப்படி உயிரும் மெய்யும் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள் பிறக்கிறது.
க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
இவைகள் அல்லாமல் ஃ என்ற ஆய்த எழுத்துச் சிறப்பு எழுத்தாக இருக்கிறது. இதனை அஃகு என்று கூறுவர். இது பேச்சிலும் எழுத்திலும் பெரிதும் பயன்பாட்டில் இல்லை.
உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆயுத எழுத்து ஒன்று என மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் உள்ளன.
12 + 18 + 216 + 1 = 247
————–
எழுத்துகள் ஒலிக்கும் ஒலியின் அளவை மாத்திரை என்பர். அதாவது ஒரு சொடுக்கு போடும் நேரம் ஒரு மாத்திரையாகும்
எழுத்துகள் ஒலிக்கும் ஒலியின் அளவு குறைவாக இருப்பதை குறில் என்றும், நெடிய ஓசையை நெடில் என்றும் பிரிப்பர்.
குறில் = 1 மாத்திரை = 1 சொடுக்கு
நெடில் = 2 மாத்திரை = 2 சொடுக்கு
அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்து வரிசைகள் குறில் எனப்படும்.
உயிர்க் குறில் = 5 (அ, இ, உ, எ, ஒ)
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழு வரிசைகள் நெடில் எனப்படும்.
உயிர் நெடில் = 7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)
அ, இ, உ, எ, ஒ ஒலி அடிப்படையில் கீழ் உள்ளவை எல்லாம் குறில்
உயிர் மெய் குறில் = 5 x 18 = 90
அ | க | ங | ச | ஞ | ட | ண | த | ந | ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன |
இ | கி | ஙி | சி | ஞி | டி | ணி | தி | நி | பி | மி | யி | ரி | லி | வி | ழி | ளி | றி | னி |
உ | கு | ஙு | சு | ஞு | டு | ணு | து | நு | பு | மு | யு | ரு | லு | வு | ழு | ளு | று | னு |
எ | கெ | ஙெ | செ | ஞெ | டெ | ணெ | தெ | நெ | பெ | மெ | யெ | ரெ | லெ | வெ | ழெ | ளெ | றெ | னெ |
ஒ | கொ | ஙொ | சொ | ஞொ | டொ | ணொ | தொ | நொ | பொ | மொ | யொ | ரொ | லொ | வொ | ழொ | ளொ | றொ | னொ |
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஒலி அடிப்படையில் கீழ் உள்ளவை எல்லாம் நெடில்
உயிர் மெய் நெடில் = 7 x 18 = 126
ஆ | கா | ஙா | சா | ஞா | டா | ணா | தா | நா | பா | மா | யா | ரா | லா | வா | ழா | ளா | றா | னா |
ஈ | கீ | ஙீ | சீ | ஞீ | டீ | ணீ | தீ | நீ | பீ | மீ | யீ | ரீ | லீ | வீ | ழீ | ளீ | றீ | னீ |
ஊ | கூ | ஙூ | சூ | ஞூ | டூ | ணூ | தூ | நூ | பூ | மூ | யூ | ரூ | லூ | வூ | ழூ | ளூ | றூ | னூ |
ஏ | கே | ஙே | சே | ஞே | டே | ணே | தே | நே | பே | மே | யே | ரே | லே | வே | ழே | ளே | றே | னே |
ஐ | கை | ஙை | சை | ஞை | டை | ணை | தை | நை | பை | மை | யை | ரை | லை | வை | ழை | ளை | றை | னை |
ஓ | கோ | ஙோ | சோ | ஞோ | டோ | ணோ | தோ | நோ | போ | மோ | யோ | ரோ | லோ | வோ | ழோ | ளோ | றோ | னோ |
ஔ | கௌ | ஙௌ | சௌ | ஞௌ | டௌ | ணௌ | தௌ | நௌ | பௌ | மௌ | யௌ | ரௌ | லௌ | வௌ | ழௌ | ளௌ | றௌ | னௌ |
18 மெய்யெழுத்துக்களை ஒலிக்க அரை சொடுக்கு நேரம் ஆகும். ½ மாத்திரை
மெய்யெழுத்து = ½ சொடுக்கு நேரம் = ½ மாத்திரை
க் | ங் | ச் | ஞ் | ட் | ண் | த் | ந் | ப் | ம் | ய் | ர் | ல் | வ் | ழ் | ள் | ற் | ன் |
ஃ என்ற ஆய்த எழுத்து ½ மாத்திரை
—————
மெய்யெழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்று குழுவாகப் பிரிப்பர்.
மார்பில் பிறப்பது வல்லினம், மூக்கில் பிறப்பது மெல்லினம், கழுத்தில் பிறப்பது இடையினம்
வல்லினம் – க், ச், ட், த், ப், ற் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் வல்லின உயிர்மெய் எழுத்துகள் ஆகும். கசடதபற
மெல்லினம் – ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் மெல்லின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். ஙஞணநமன
இடையினம் – ய், ர், ல், வ், ழ், ள் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் இடையின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். யரலவழள.
——————
இனவெழுத்துகள்
தமிழ் எழுத்துகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு விளங்குகின்றன. அவ்வாறு உறவு உடைய எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
உயிர் எழுத்துகளுள் அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ, ஒ-ஓ என்பன ஓரினமாகும்.
மெய்யெழுத்துகளுள் வல்லெழுத்துக்கு மெல்லெழுத்து இனமாகும். க-ங, ச-ஞ, ட-ண, த-ந, ப-ம, ற-ன என்பவை தம்முள் இனமாகும்.
க | ங |
ச | ஞ |
ட | ண |
த | ந |
ப | ம |
ற | ன |
உதாரணமாக
க் ங் = தங்கம் என்ற சொல்லில் ங்க உறவாக இனமாக உள்ளது
ச் ஞ் = மஞ்சள் என்ற சொல்லில் ஞ்ச உறவாக இனமாக உள்ளது
ட் ண் = வண்டி என்ற சொல்லில் ண்டி உறவாக இனமாக உள்ளது
த் ந் = பந்து என்ற சொல்லில் ந்து உறவாக இனமாக உள்ளது
ப் ம் = பம்பரம் என்ற சொல்லில் ம்ப உறவாக இனமாக உள்ளது
ற் ன் = நன்றி என்ற சொல்லில் ன்றி உறவாக இனமாக உள்ளது
இந்தக் கட்டுரைகள் நாம் கற்றுக் கொண்டவை
1. முதலெழுத்து
2. உயிரெழுத்து
3. மெயெழுத்து
4. உயிர்மெயெழுத்து
5. ஆய்த எழுத்து
6. மாத்திரை
7. குறில்
8. நெடில்
9. வல்லினம்
10. மெல்லினம்
11. இடையினம்
12. இனவெழுத்து