பாடல் கட்டுரை

தமிழ்த்தாய் வாழ்த்து ஈழம்

ஈழம் – நாட்டுப்பண்

வான்முட்டும் எழில்கொண்டு
வளமாகவும் – இன்பத்
தேன்சொட்டும் தமிழ்சேர்ந்து
நலமாகவும்

யாழ்ப்பாண நகரோடு
பெரும்கல்வியும் – எம்மை
வாழ்விக்க உணவூட்டும்
திருவன்னியும்

மட்டு வாவிக்குள் மீன்பாடும்
இசை சந்தமும் – வெற்றி
மேவும் வெண் தீவெங்கும்
உயிர் சொந்தமும்

கிளிநொச்சி வளமுல்லை
அம்பாறையும், தெள்ளத்
தெளிந்தோடும் பொன்னருவி
ஆற்றோரமும்

சூழ்கொண்ட மன்னாரின்
முத்தாரமும் – எங்கும்
சுடரேற்றும் திருகோண
மலை மொத்தமும்

நாளும் நிலை உயர்வாக
செயலாற்றுவோம் – எங்கள்
ஈழத்தமிழ் திருநாட்டின்
புகழ்போற்றுவோம்

வாழிய வாழிய வாழியவே
எங்கள் ஈழத் தமிழ்த்
திருநாடு வாழியவே!