இலக்கணம் கட்டுரை

பிழையின்றி எழுதும் முறைகள் (Error-Free Writing)

சொல் – பொது விதிகள்

(சில விதிவிலக்குகள் உண்டு)

 

  1. மெய்யெழுத்து முதலில் வாராது. க், ங், ச், ஞ்… 
  2. உயிர் எழுத்து இடையில் வராது. அ, ஆ, இ, ஈ… 
  3. ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எழுத்தில் சொல் தொடங்காது.
  4. சொல் முடியும் மெய்யெழுத்துகள் (ண், ம், ய், ர், ல், ழ், ள், ன்)
  5. பன்மையை குறிக்கும் சொற்களுக்கு ளகரம் தான் வரும். கண்கள், அவர்களுடைய, மக்களின்
  6. இனவெழுத்து சேர்ந்து வரும். கங, சஞ, டண, தந, பம, றன ( தங்கம், மஞ்சள், கண்டம், சொந்தம், கம்பம், மன்றம்)
  7. தன் ஒற்று சேர்ந்து வரும் (க்க, ங்ங, ச்ச, ஞ்ஞ, ட்ட, ண்ண, த்த, ந்ந, ப்ப, ம்ம, ய்ய, ல்ல, வ்வ, ள்ள, ற்ற, ன்ன)
  8. டகர வரிசை ட், ண் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (எட்டு, சண்டை) வரும். இனவெழுத்து, டண்ணகரம்
  9. றகர வரிசை ற், ன் ஆகிய மெய்களை மட்டுமே அடுத்து (அகற்றம், மன்றம்) வரும் இனவெழுத்து, றன்னகரம்