இலக்கணம் வினாவிடை

188) சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
சேவல்‌ கூவ பொழுது புலர கதிர்‌ எழுந்தது
189) பிரித்து எழுதுக : தொல்லுலகம்‌
தொன்மை + உலகம்‌
190) இலவு காத்த கிளிபோல - உவமையால்‌ விளக்கப்பெறும்‌ பொருத்தமானப்‌ பொருளைத்‌ தேர்ந்தெடுக்க.
ஏமாற்றம்‌
191) முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
ஓடும்‌ செம்பொன்னும்‌ ஒக்கவே நோக்குவார்‌
192) படி என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினையெச்சத்தை தேந்தெடுக்க.
படித்து
193) மராமத்து இலாக்கா சரியான தமிழ்சொல்‌ தருக.
பொதுப்பணித்துறை
194) தலை பெயர்ச்சொல்லின்‌ வகை அறிக.
சினைப்பெயர்‌
195) மகிழ்‌ என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயரைத்‌ தேர்ந்தெடுக்க.
மகிழ்ந்தவன்‌
196) இகழ்‌ என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயரைத்‌ தேர்ந்தெடுக்க.
இகழ்வார்‌
197) மீமிசை ஞாயிறு என்பது
ஒருபொருட்பன்மொழி
198) பிரித்து எழுதுக: பெருங்குணம்‌
பெருமை + குணம்‌